ஏழைகளுக்கு 20 கிலோ இலவச அரிசி: கையெழுத்திட்டார் முதல்வர் ஜெயலலிதா




சென்னை, மே 16- தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா, இன்று மாலை புனித ஜார்ஜ் கோட்டைக்கு சென்று முதல்வர் பணிகளை கவனிக்கத் தொடங்கினார். ஏழைகளுக்கு 20 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டம் உட்பட 7 கோப்புகளில் அவர் இன்று கையெழுத்திட்டார்.ஏழைகளுக்கு 20 கிலோ இலவச அரிசி மற்றும் பரம ஏழைகளுக்கு 35 கிலோ இலவச அரிசி, அரசு ஊழியர்களின் பேறுகால விடுப்பு 6 மாதங்களாக அதிகரிப்பு, பெண்களுக்கான திருமண உதவித்தொகை ரூ. 50,000 ஆக உயர்வு, ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு 4 கிராம் இலவசத் தங்கம், மீன்பிடி தடைக் காலத்தில் மீனவர்களுக்கான நிவாரணத் தொகை ரூ. 2000 ஆக உயர்வு, முதியோர் உதவித்தொகை ரூ. 1000 ஆக உயர்வு ஆகிய 7 உத்தரவுகளில் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.தமிழகத்தை இந்தியாவின் முதன்மையான மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஜெயலலிதா தெரிவித்தார்.




Share your views...

0 Respones to "ஏழைகளுக்கு 20 கிலோ இலவச அரிசி: கையெழுத்திட்டார் முதல்வர் ஜெயலலிதா"

Post a Comment

 

Categories

About Me

My Photo
சண்முககுமார்
View my complete profile

© 2010 w All Rights Reserved Thesis WordPress Theme Converted into Blogger Template by Hack Tutors.info